உக்ரைன் விவகாரத்தால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக கிராம் ரூ.5071 ஆக உயர்ந்தது. தங்கம் விலை நேற்று கடுமையாக உயர்ந்தநிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.5020- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.408 குறைந்து ரூ. 40160-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 43088-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை ரூ.1.10 குறைந்து ரூ 74.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 74,600 ஆக உள்ளது