சென்னை: பப்ஜி மதன் ஜாமின் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டது. ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யப் போவதாக நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து ஜாமின் மனு வாபஸ் பெறப்பட்டது. தன்னுடன் விளையாடியவர்களிடம் மட்டுமே உரையாடியதாகவும், 316 நாட்களாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என பப்ஜி மதன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்களிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.