தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி (பெரம்பூர்) K1 செம்பியம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து சமூக சேவையாற்றி வரும் ஆய்வாளர்கள்
துணை ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு மழைக்காலத்தில் தேவையான உயர்தர மழைகோட் (Rain Coat) இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத் துணைத் தலைவர் T.R மாதேஸ்வரன் செயலாளர் S.சுரேந்திரன் சென்னை மாவட்ட தலைவர் திரு. குமார் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் S.சீனிவாசன், செந்தில் அருள்,M. ரவிக்குமார்,A.ஹரிபாபு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.