கடந்த மாதம் 20-ந்தேதி முதல் அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை இருந்துவரும் நிலையில், அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

கொரோனா பரவலை தடுப்பதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரை 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்யவும் இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது.

கடந்த மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை இருந்துவரும் நிலையில், அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

தற்போது முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் ராமேசுவரம் கடலில் புனித நீராட யாருக்கும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.