வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு, சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக

ஜூலை 1 இன்று, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 2 அன்று தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 3 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மதுரை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 4 மற்றும் ஜூலை 5 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு:

அம்முண்டி (வேலூர்) 11 சென்டிமீட்டர், வாலாஜா (ராணிப்பேட்டை) 10 சென்டிமீட்டர், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 8 சென்டிமீட்டர், ஆற்காடு (ராணிப்பேட்டை) 6 சென்டிமீட்டர், வானமாதேவி (கடலூர்) 5 சென்டிமீட்டர், நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்) 4 சென்டிமீட்டர், வென்குர் (கள்ளக்குறிச்சி) 3 சென்டிமீட்டர், நிலக்கோட்டை (திண்டுக்கல்), பாலக்கோடு (தர்மபுரி) நெடுங்கல் (கிருஷ்ணகிரி), காஞ்சிபுரம், கொள்ளிடம் (மயிலாடுதுறை) பாலவிடுதி (கரூர்) ஏத்தாப்பூர் (சேலம்) 2 சென்டிமீட்டர், சோலையாறு (கோவை) போளூர் (திருவண்ணாமலை), மேட்டுப்பட்டி (மதுரை), சூளகிரி (கிருஷ்ணகிரி) தலா 1 சென்டிமீட்டர்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அரபிக்கடல் பகுதியில்

ஜூலை 1 முதல் ஜூலை 5 வரை தென்மேற்கு, மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.