சென்னை: தமிழகத்தில் நேற்று சூரிய ஒளி மூலம் 4666 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்படி நேற்று சூரிய ஒளி மூலம் 4666 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”திக்கெட்டும் புகழ்ந்திட திராவிட மாடல் ஆட்சி புரியும், முதல்வரின் நல்லாட்சியில், இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி, நேற்று (15/01/2023 – 01:00 Hrs) 4666.66 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி 13ம் தேதி 4564 மெகாவாட், ஜனவரி 11ம் தேதி 4480 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

திக்கெட்டும் புகழ்ந்திட திராவிட மாடல் ஆட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாட்சியில், இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி, நேற்று (15/01/2023 – 01:00 Hrs) 4666.66 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. #MKStalinGovt pic.twitter.com/ai2ao4MHIo