சென்னை மெட்ரோ ரயில்களில் நிகழாண்டில் ஜூலை மாதத்தில் 53 லட்சத்து 17 ஆயிரத்து 659 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள மக்களுக்கு ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்து வருகிறது. மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பயணித்து வருகின்றனர். இதுதவிர, பயணிகள் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூலைமாதத்தில் 53 லட்சத்து 17 ஆயிரத்து 659 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, ஜூலை 27-ம் தேதிஒரு லட்சத்து 97 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஜூன்மாதத்தில் 52 லட்சத்து 90 ஆயிரத்து 390 பேர் பயணம் செய்தனர்.

கடந்த ஜூலையில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 16 லட்சத்து 11 ஆயிரத்து 440 பேரும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32 லட்சத்து 81 ஆயிரத்து 792 பேரும் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.