பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய்” என்று பிரதமர் மோடி தாயாரின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு கைப்பட எழுதி இரங்கல் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, “நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தியைக் கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்.

பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய். எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதையும் கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கு காண முடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் அவர்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.