Author: Abdur Rahman (Abdur Rahman)

Home Abdur Rahman
Post

பிஎல்ஓ அலவலர்கள் தற்கொலை: தேர்தல் ஆணையத்தை சாடிய மம்தா பானர்ஜி

இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து...

Post

டெல்லியில் நிகழ்த்தப்பட்து பயங்கரவாத தாக்குதல் தான்: அசாதுதீன் ஒவைசி

டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம், பயங்கரவாத தாக்குதல் தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். கடந்த நவ.,10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே டாக்டர் உமர் நபி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன்,...

Post

ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்வு

பீகாரில் நாளை (நவம்பர் 20) புதிய அரசு அமைய உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி (ஆர்வி) 19, ஹெச்ஏஎம் 5,...

Post

சாய்பாபாவின்நூற்றாண்டு கொண்டாட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புட்டபர்த்திக்கு வருகை தந்தார். தொடர்ந்து, சத்ய சாய் பாபாவின் மகா சமாதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார். அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் வேத விற்பண்ணர்கள் வேத கோஷங்கள் முழங்க பிரதமர் மோடியை ஆசீர்வதித்தனர். இதையடுத்து நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கவுரவிக்கும் வகையில் நினைவு...

Post

தேர்தல் ஆணையத்தின் நடத்தை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லியில் நடத்தினார். இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் வேணுகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுடன்...

Post

பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமிலேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலி​யுறுத்​தி​யுள்​ளார். ஆந்​திரப் பிரதேச மாநிலம் அமராவ​தி​யில் நேற்று நடை​பெற்ற ‘75-ஆவது ஆண்​டில் இந்​தியா மற்​றும் இந்​திய அரசமைப்​புச் சட்​டம்’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் பேசி​ய​தாவது: இட ஒதுக்​கீட்​டின் முன் ஐஏஎஸ் அதி​காரி​யின் குழந்​தையை​யும், ஒரு சாதாரண ஏழை விவ​சா​யத் தொழிலா​ளி​யின் குழந்​தையை​யும் சமமாகக் கருத முடி​யாது. எனவே, பட்​டியல் சாதி​யினருக்​கான...

Post

பீகார் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு: ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பேற்கிறேன் என்று ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும், 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கு 100 சதவீத பொறுப்பையும் தானே ஏற்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பாட்னாவில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர்...

Post

குடும்ப பிரச்சனையை நான் தீர்த்துக் கொள்வேன்: கட்சியினருக்கு அறிவுறுத்திய லாலு பிரசாத் யாதவ்

குடும்ப பிரச்னையை வீட்டுக்குள் நான் தீர்த்துவிடுவேன், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர்களுக்கு லாலு பிரசாத் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பீகார் தேர்தலில் போட்டியிட்டவர்களை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். இந்தக் கூட்டத்தில், லாலு பிரசாத் யாதவ், மனைவி ராஃப்ரி தேவி மற்றும்...

Post

டொனால்டு டிரம்ப்பின் காசா திட்டம்: ஹமாஸ் நிராகரிப்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது முதற்கட்ட கோரிக்கையாகும். இதை இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரோடு இருந்த 20 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இந்த நிலையில் காசாவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டத்திற்கான டொனால்டு டிரம்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை இஸ்ரேல் பிரதமர்...

Post

கோவை, மதுரை மெட்ரோ ரயில் சேவையை நிராகரித்த மத்திய அரசு; குறைவான மக்கள் தொகை காரணம் என தகவல்

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையை காரணம் காட்டி திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களுக்கு மெட்ரோ திட்டம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இரண்டு மாநகர் பகுதிகளிலும் 20 லட்சத்திற்கும்...