சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, தேனி, ஈரோடு, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.