தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் கட்டணம் குறைக்க நடவடிக்கை என சட்டப்பேரவையில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.