Site icon Metro People

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விவரம்

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன் விவரம்:

கைதிகள் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர். மாற்றுத் திறனாளி தேர்வர்களுககு தேர்வு மையங்களில் தரைத்தளத்தில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

தேர்வுகளை, செம்மையாக நடத்திட ஒத்துழைப்பு நல்கக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

Exit mobile version