சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாழ்வூட்டும் மருத்துவம் என்ற திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது;  இரவு நேரங்களில் சாப்பிட்டு முடித்து மீதமான உணவை பானைகளில் போட்டு தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை மோரோ, தயிரோ கலந்து சாப்பிடுவது கிராமங்களில் வழக்கம்; நகரங்களில் எங்களை போன்றவர்களும் அதை பின்பற்றி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.