Site icon Metro People

தேர்தலில் சீட் வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்ததாக இளவரசியின் மருமகன் மீது வழக்கு பதியக்கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

சசிகலா உறவினரான இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் சேலத்தில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வாங்கித் தருவதாக கூறி இளவரசியின் மருமகனான ராஜராஜன் என்னிடமிருந்து சுமார் 5 கோடி வாங்கினார். ஆனால், தேர்தலில் போட்டியிட சீட்டு வாங்கி தரவில்லை. அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.

ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பணம் கொடுத்தது தொடர்பாக எந்த ஆவணங்களும் முறையாக இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Exit mobile version