சென்னை : அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதே போல, சென்னை அண்ணா சாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சரித்திர நாயகன் அண்ணாவை நினைவு கூறுகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!,’எனக் குறிப்பிட்டுள்ளார்.