உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக சங்க தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் மற்றும் நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத்தலைவர் திரு T.R.மாதேஸ்வரன் மற்றும் F3 நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் திரு.மருது தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். இவ்விழாவில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் திரு. S.துரைராஜ் திரு. M. ரவிக்குமார் திரு. M.சரவணன் திரு. M.அஜய்குமார் திரு. ஆனந்த் மற்றும் உறுப்பினர்கள் திரு.கலையரசன் திரு.சிலம்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.