மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

வரும் 28-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகின்றது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இத்தகைய போட்டியானது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை இன்று மாலை வெளியிட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இது குறித்து ரஜினிகாந்த் கூறும்போது,

”செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடருக்கான டீசர் வீடியோவை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.