Site icon Metro People

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் கார்த்தி

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
இந்நிலையில், நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கார்த்தி, முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் கார்த்தி கைவசம், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

Exit mobile version