விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்!

பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘லைகர்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்திருந்தனர். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். இதில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.