மும்பை: கறுப்புத் திங்கள் என வருணிக்கும் அளவுக்கு இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்ட மறுநாளில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்து மீட்சி ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்றே நிம்மதியைத் தந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஏப்.8) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் உயர்ந்து 74,421.65 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் உயர்ந்து 22,577.55 ஆக இருந்தது. இந்த மீட்சிப் போக்கு தொடர்ந்துள்ளது.