முரளி, சிம்ரன் நடிப்பில் ‘கனவே கலையாதே’ படத்தை இயக்கித் திரையுலகில் நுழைந்தவர் வ.கௌதமன். வீரப்பன் வாழ்க்கையைப் பேசிய ‘சந்தனக் காடு’ என்கிற தொலைக்காட்சி நெடுந்தொடர் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது.
பின்னர், எழுத்தாளர் நீல.பத்ம நாபனின் ‘தலைமுறைகள்’ நாவலுக் குத் திரைக்கதை எழுதி, இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்திருந்த ‘மகிழ்ச்சி’ 2010இல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில் ‘தமிழ்ப் பேரரசுக் கட்சி’யைத் தொடங்கிய இவர், ஜல்லிக்கட்டு மீதான தடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நெய்வேலி நில ஆர்ஜிதம், தமிழ் மீனவர் மீதான இலங்கையின் தாக்குதல் ஆகியவற்றை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தியவர்.