ஏப்.2, 3-ல் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

ஏப். 2, 3, 4-ம் தேதி​களில் சில இடங்​களி​லும், 5-ம் தேதி ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஏப். 2-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகு​தி​கள், தென்​காசி, விருதுநகர், தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்டங்களி​லும், 3-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகு​தி​கள், நீல​கிரி மற்​றும் ஈரோடு மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *