Site icon Metro People

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

வண்ணாரப்பேட்டை யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரயில்களின் இயக்கத்தை கருத்தில்கொண்டு தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வண்ணாரப்பேட்டை யார்டில் இன்று (13-ம் தேதி) இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 3.30 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதனால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே நாளை அதிகாலை 1.20 மணி ரயில்சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம் – வேளச்சேரிக்கு நாளை அதிகாலை 4 மணி ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version