Site icon Metro People

கரோனா அதிகரிப்பு: தனியார் பள்ளிகளில் ‘ஷிப்டு’ முறை?

சென்னை: தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் 200 ஆக இருந்த தொற்று பரவல் இப்போது ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

அதனால் 10 பேருக்கு மேல் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்தலாமா அல்லது 10, 11, 12 மாணவர்களைத் தவிர பிற மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து வகுப்புகள் நடத்தலாமா அல்லது காலை, மாலை என 2 ‘ஷிப்டு’களாக நடத்தலாமா என்று தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

Exit mobile version