Site icon Metro People

கொரோனா தடுப்பூசி… பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: ஜல்லிக்கட்டு போட்டிக்கான நெறிமுறைகள் வெளியீடு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுபோது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.2023-ம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இதனையடுத்து வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் முறையே 16.01.2023 மற்றும் 17.01.2023-ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில் கோவிட்-19 நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அரசின் விதிமுறைகளின்படி பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.2023-ம் தேதியன்றும் மற்றும் வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் முறையே 16.01.2023 மற்றும் 17.01.2023-ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு அரசால் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படவுள்ளது.

Exit mobile version