சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்க உள்ளதால், ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் 20 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம்: ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05 மணி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதேபோல, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி காலை 10.30, முற்பகல் 11.35 மணி ரயில்களும், கடற்கரை – கும்மிடிப்பூண்டி காலை 9.40, நண்பகல் 12.40 மணி ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.
கும்மிடிப்பூண்டி – கடற்கரை காலை 10.55, பிற்பகல் 2.30, 3.15 மணி ரயில்கள், சூலூர்பேட்டை – நெல்லூர் பிற்பகல் 3.50 மணி ரயில், நெல்லூர் -சூலூர்பேட்டை மாலை 6.45 மணி ரயில், கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் மதியம் 1.00 மணி ரயில் சூலூர்பேட்டை – சென்ட்ரல் பிற்பகல் 11.45, மதியம் 1.15, பிற்பகல் 3.10, இரவு 9.00 மணி ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன.
இதற்கு பதிலாக, சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.