2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய காலநிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முக்கியமான அறிக்கையை உலக வானிலை ஆய்வு அமைப்பு (World Meteorological Organisation) தயாரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் எவ்வளவு தீவிரமானதாக மாறிவருகிறது என்பதை இந்த அறிக்கையின் தரவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
அதிகரித்துவரும் வெப்பம்: தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது உலகளாவிய சராசரி வெப்பநிலை எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்பதே காலநிலை மாற்றத்தின் முக்கியமான அலகு. உலகளாவிய சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது எனவும், முடிந்தால் அதை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் காலநிலைக்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு
இருந்தது.