வட கிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவுவது அவசியம்!

வன்முறைச் சம்பவங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் சில பகுதிகளைத் தவிர, மாநிலம் முழுவதும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (ஆஃப்ஸ்பா) ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளிலும் இந்தச் சட்டம் நீட்டிக்கப்படுகிறது.

அவ்வப்போது பதற்றத்துக்கு உள்ளாகும் வட கிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவையை இந்த நடவடிக்கை உணர்த்துகிறது. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம், இந்திய தேசிய ராணுவத்துடன் இணைந்து ஜப்பான் படைகள் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் அவசரச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *