Site icon Metro People

100 கி.மீ வேகத்தை கூட தாண்டாத ‘வந்தே பாரத்’ ரயில்கள் – அதிகபட்சமே 94 கி.மீ தான்!

இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் தற்போது வரை 100 கி.மீ வேகத்தை கூட தாண்டவில்லை என்று தெரியவந்துள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த வகையான ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன.

இதன் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை – காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்திலும், 5-வது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்திலும், 6-வது சேவை நாக்பூர் – பிலாஸ்பூர் வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிபட்சமாக 180 கி.மீ வரை இயக்கும் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்கள், தற்போது வரை 100 கி.மீட்டர் என்ற சராசரி வேகத்தை கூட தாண்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version