Site icon Metro People

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய அட்டவணை வெளியீடு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வு நடக்கும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மற்றும் பொது இடமாறுதலுக்கான கலந்தாய்வு பிப்.16 முதல் மார்ச் 7-ம் தேதிவரை நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய கலந்தாய்வு கால அட்டவணையை தொடக்கக் கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி நேற்று வெளியிட்டார்.

அதன்படி, பிப்.16, 17-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

கலந்தாய்வு தேதிகள் மாற்றம்

பிப்.25-ல் நடப்பதாக இருந்த கலந்தாய்வு 24-ம் தேதிக்கும், மார்ச் 4-ம் தேதி கலந்தாய்வு பிப்.25-ம் தேதிக்கும், மார்ச் 5-ம் தேதி கலந்தாய்வு பிப். 28-ம் தேதிக்கும், மார்ச் 7-ம் தேதி கலந்தாய்வு மார்ச் 2-ம் தேதிக்கும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்விஅதிகாரிகள், வட்டாரக் கல்விஅதிகாரிகளுக்கும் இதுகுறித்ததகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version