Site icon Metro People

கழிவு நீர் அகற்றும் லாரிகளுக்கான தமிழக அரசின் புதிய விதிகள்: முக்கிய அம்சங்கள் என்னென்ன

தமிழகத்தில் கழிவுநீரை அகற்றுவதற்கும், மலக்கசடு மற்றும் கழிவுநீரை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் லாரிகள், டிரெய்லர்களை ஒழுங்குபடுத்த தமிழக அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டு மக்கள் தொகையில், சுமார் 50 சதவீத மக்கள் நகர்ப்புரத்தில் வசிக்கின்றனர். இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இதன் காரணமாக நகர்புறங்களில் திறந்த வெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடுகள், கழிவுநீர் மற்றும் இதர கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற வகையில் வெளியேற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது.

எனவே, கழிவுநீரை அகற்றுவதற்கும், மலக்கசடு மற்றும் கழிவுநீரை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் லாரிகள், டிரெய்லர்கள் அல்லது பிற வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவது கடந்த 2022ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிறக்கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுத்ததல் மற்றும் முறையான சுத்திகரிப்பை உறுதி செய்ய 2022ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் (திருத்தச்) சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

Exit mobile version