அம்பேத்கர் பேரறிவின் ஓயாத பேரலை

சாதி கட்டமைப்பு ஒடுக்கப்படுவோர் மேல் சுமத்துகின்ற இன்னல்களை அனுபவித்த அம்பேத்கர் கல்வியால் பெற்ற பாரிஸ்டர், டாக்டர் பட்டங்களைப் ‘பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தாமல்’, அவற்றைச் சமூக விடுதலைக்கான பேரறிவாகவும் பேரியக்கமாகவும் உருமாற்றினார்.

ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பின்னர், அவருடைய இயக்கச் செயல்பாடுகள் பிரிட்டிஷ்-இந்தியாவில் பேரசைவுகளை ஏற்படுத்தின. அம்பேத்கருக்கும் மதராஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த சமூக விடுதலை இயக்கங்களுக்கும் ஆழமான நட்பு உருவானது. அவரை காங்கிரஸ் இயக்கம் விமர்சித்தது; சாதியைப் பேண விரும்பிய வைதீகர்கள் எதிர்த்தனர். அம்பேத்கர் எப்போதும் ஏதோ ஒரு கோணத்தில் பேசப்பட்டார்; இக்காலத்திலும் அது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *