Site icon Metro People

7.97 லட்சம் கரோனா தடுப்பூசிகள் புனே, ஹைதராபாத்தில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது

தமிழகத்துக்கு 7.97 லட்சம் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு நேற்று அனுப்பியது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுவதால், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் சில தினங்களிலேயே தீர்ந்து விடுகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், புனேவில் இருந்து 5 லட்சத்து 81,270 கோவிஷீல்டு, ஹைதராபாத்தில் இருந்து 2 லட்சத்து 15,810 கோவாக்சின் என மொத்தம் 7 லட்சத்து 97,080 லட்சம் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு நேற்று வந்தன.

அவற்றை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள், தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version