குடியேற்ற மசோதா 2025 | சொல்… பொருள்… தெளிவு

ஒரு நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அதன் எல்லைக்குள் யார், எப்போது நுழைகிறார்கள், எவ்வளவு காலம் தங்குகிறார்கள், அவர்கள் வந்ததன் நோக்கம் போன்றவற்றை அரசு அறிந்துகொள்வது அவசியம். ​முறை​கேடான வர்த்​தகம், சட்டவிரோதக் குடியேற்றம், ஆயுதம், வெடிமருந்து ஊடுருவல், போதைப்​பொருள் கடத்தல் போன்றவை இந்தியாவின் பாதுகாப்​புக்கு நீண்ட​காலமாக அச்சுறுத்தலாக இருந்து​வரு​கின்றன.

அந்த வகையில் இந்தியா​வுக்கு வருகை தரும் வெளிநாட்​டினரின் வருகையை நெறிப்​படுத்தப் புதிய குடியேற்ற மசோதா 2025-ஐ நாடாளு​மன்​றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வெளிநாட்​டினரின் இந்திய வருகையை இந்த மசோதா ஒழுங்குபடுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *