தென்காசி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 24.73% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்.6 ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 10.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆலங்குளம் ஊராட்சியில் 26.7%, கடயம் ஊராட்சியில் 23.84%, கீழப்பாவூரில் 24.26%, மேலநீதிநல்லூரில் 25.94%, வாசுதேவநல்லூரில் 22.01% என மொத்தமாக 24.73% வாக்குகள் பதிவாகியுள்ளன.