நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். மருமகன் நவீன்குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் 2 வாரத்துக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.