பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருக்க தடை விதித்து அனைத்து கிளை மேலாளர்களுக்கும் நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக் கழகம் கிளை மேலாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், “ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரையாடுவதாலும் அதிக விபத்து ஏற்படுகிறது. ஓட்டுநர்கள் பணியின் போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்க கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நடத்துநர் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும். பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிளை மேலாளர்களுக்கும் நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.