சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் முடியும் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகளை தர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.