சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் செய்யப்படவில்லை.  அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, சவரன் ரூ.38,080-க்கு விற்பனையானது. இது வாடிக்கையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,160 ஆக அதிகரித்தது. இதனால் நகை பிரியர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், நேற்று முந்தைய தினம் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,765-க்கும், ஒரு சவரன் ரூ. 38,120-க்கும் விற்பனையானது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இதனையடுத்து நேற்றைய தினமான 29-ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. அதாவது ஒரு கிராம் ரூ.4,683-க்கும், ஒரு சவரன் ரூ. 37,464-க்கும் விற்பனையானது. ஆனால் இன்று, நேற்றைய விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சவரனுக்கு ரூ.37,464-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராம் ரூ.4,683-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,200-க்கும் விற்கபட்டு  வருகிறது.