மோட்டார் வாகன விதிகள் செயல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின் படி, 2018-ல் மொத்தம் 4,67,041 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 3,10,612-ம், மது/போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 12,018-ம் பாதை ஒழுங்கில்லாமை காரணமாக 24,781-ம், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 4,441-ம், கைபேசி பயன்பாட்டின் காரணமாக 9,039-ம், இதர காரனங்களுக்காக 1,06,150-ம் ஏற்பட்டுள்ளன.

2019-ம் ஆண்டில் மொத்தம் 4,49,002 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 3,19,028-ம், மது, போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 12,256-ம் பாதை ஒழுங்கில்லாமை காரணமாக 24,431-ம், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 4,443-ம், கைபேசி பயன்பாட்டின் காரணமாக 10,522-ம், இதர காரனங்களுக்காக 78,322-ம் ஏற்பட்டுள்ளன.

2020-ம் ஆண்டில் மொத்தம் 3,66,138 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 2,65,343-ம், மது, போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 8,355-ம் பாதை ஒழுங்கில்லாமை காரணமாக 20,228-ம், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 2,721-ம், கைபேசி பயன்பாட்டின் காரணமாக 6,753-ம், இதர காரனங்களுக்காக 62,738-ம் ஏற்பட்டுள்ளன.

புதிய சட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் 1 செப்டம்பர் 2019 முதல் 31 டிசம்பர் வரை ரூ 550,73,02,804-ம், 1 ஜனவரி 2020 முதல் 31 ஜனவரி 2020 வரை ரூ 1564,57,21,915-ம், 1 ஜனவரி 2021 முதல் 31 ஜனவரி 2021 வரை ரூ 2104,29,52,569-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1 செப்டம்பர் 2019 முதல் 31 டிசம்பர் வரை ரூ 26,75,52,184-ம், 1 ஜனவரி 2020 முதல் 31 ஜனவரி 2020 வரை ரூ 87,04,10,836-ம், 1 ஜனவரி 2021 முதல் 31 ஜனவரி 2021 வரை ரூ 92,24,75,383-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.