சென்னையில் டிசம்பர் 20 மற்றும் 21-ம் தேதிகளில் எங்கெங்கு ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் 20.12.2021 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவல்லிக்கேணி பகுதி: மாட்டன்குப்பம் அனைத்து பகுதி, வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பைகிராப்ட்ஸ் சாலை, பழனியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பாரதி சாலை, ராஜா அனுமந்தலாலா தெரு, வெங்கடாசல நாயக்கன் 1 முதல் 3-வது தெரு வரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பாலவாக்கம் பகுதி: வி.ஜி.பி லே அவுட் முதல் குறுக்கு, அண்ணா சாலை, பாலவாக்கம் குப்பம், சங்கரபுரம், சீசேல் அவென்யூ, ரேடியோ காலனி, சாரி அவென்யூ, சைத்தனியா அவென்யூ, ராம் கார்டன், பூங்கா தெரு, அம்பேத்கர் தெரு.

சிறுசேரி பகுதி: சிப்காட், சிறுசேரி, பாசிபிகா அப்பார்ட்மெண்ட், ரெடியன்ஸ் அப்பார்ட்மெண்ட், பிள்ளையார் கோயில் தெரு படூர் கிராமம்.

இதேபோல் 21.12.2021 தேதி காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அஸ்தினாபுரம் பகுதி: வெங்கடராமன் நகர், சிவகாமி நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், பி.பி.ஆர் மற்றும் புவனேஸ்வரி நகர்.

பஞ்செட்டி பகுதி: அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜன்பச்சத்திரம், பி.பி ரோடு, ஜெகநாதபுரம் ரோடு, சாய்கிருபா நகர் மற்றும் விருந்தவன் நகர்”ஆகிய இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.