தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது.