சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்தித்து பேசி வருகிறார். பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், ஆகியோர் முதலமைச்சர் சந்தித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் தனது விடுதலைக்காக அழுத்தமான வாதங்களை முன்வைத்ததற்கு பேரறிவாளன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.