சென்னை: உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று முதல் வரும் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆதார், வங்கி கணக்கு, கல்விச் சான்றிதழுடன் முதல் நாளில் 15,000 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
உயர்கல்விக்கு #மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் #தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 #மாணவிகள் விண்ணப்பம்..!!
