தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3552 காலிப் பணியிடங்களுக்கு 07.07.2022 முதல் 15.08.2022 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.tnusrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்

காவல்துறையில் 2180 மற்றும் புலனாய்வுத் துறையில் 1091, 161 சிறை வார்டர் மற்றும் 120 தீயணைப்பு வீரர் உட்பட தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 3,552 காலியிடங்களை TNUSRB அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பு / SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி கட்டாயம்.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் NCC, NSS, Sprots/Games சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் உருவாக்கப்படும்.

காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி என்று புதிய நடைமுறையைத் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுப் பணிகளில் சேர்வதற்குத் தமிழ் தகுதி கட்டாயம் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் அரசு பணி நடத்தும் அனைத்து தேர்வு முகமைகளும் தமிழ் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காவலர் தேர்வுகளில் மாற்றத்தை கொண்டு வந்தது. அரசாணையின் அடிப்படையில் தமிழ் தகுதித்தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.

இதனிடைேய, விண்ணப்பிப்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காலை 09.30 மணி முதன் மாலை 06.00 மணி வரை நேரில் சென்றோ அல்லது 9789118638 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.