சென்னை: வரும் 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 2 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 15,16,17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என்று 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், வரும் 18ம் தேதி புதன் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.