மதுரை: தென்மண்டலத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் கஞ்சா கடத் தல், பரிமாற்றம் தொடர்பாக மேற்கொள் ளப்பட்ட தொடர் நடவடிக்கையில் 494 வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக ஐஜி அஸ்ரா கர்க் தெரிவித்தார்.

தென் மண்டலத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் உத் தரவிட்டுள்ளனர்.

இதன்படி, தென் மாவட்டங் களில் மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகள் குறித்து ஐஜி அஸ்ரா கர்க் கூறியதாவது:

தென்மண்டலத்தில் இந்தாண்டு இதுவரை கஞ்சா தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் குண் டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா தொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள், மூன்று சக்கர வாகனங்கள், சேடபட்டி காவல்நிலையத்தில் பதிவான வழக்குகளில் ரூ. 59 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், பட்டி வீரன்பட்டி காவல்நிலையத்தில் பதிவான வழக்கில் ரூ. 1.8 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும், தேனி மாவட்டம், மயிலாடும்பாறை மற்றும் ஓடைப்பட்டி காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் ரூ. 23 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் முடக்கப்பட்டன. மதுரை, திண்டுக்கல் உட்பட 4 சரக டிஐஜிக்கள் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட எஸ்பிக்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடு படுவோர், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்துக்குரிய வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 2 வாரத்தில் மதுரை மாவட்டத்தில் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகளும், விருது நகரில் 76 வழக்குகளில் 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 வழக்குகளில் 116 வங்கி கணக்குகளும், தேனியில் 81 வழக்குகளில் 146 வங்கி கணக் குகளும், ராமநாதபுரத்தில் 28 வழக்குகளில் 56 வங்கிக் கணக்குகளும், சிவகங்கையில் 12 வழக்குகளில் 16 பேரின் வங்கி கணக்குகளும், நெல்லையில் 14 வழக்குகளில் 22 வங்கி கணக்குகளும், தென்காசியில் 11 வழக்குகளில் 20 வங்கி கணக் குகளும், தூத்துக்குடியில் 22 வழக்குகளில் 36 வங்கி கணக்கு களும், கன்னியாகுமரியில் 59 வழக்குகளில் 91 வங்கிக் கணக் குகளும் என 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.

கஞ்சா வழக்குகளில் சிக்கு வோர் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களின் சொத்துகளும் முடக்கப்படும். கஞ்சா சில்லறை வியாபாரிகளின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.