சென்னை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. 12,13ம் தேதியில் அரசு மேனிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட இருந்தது. பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கோரி தலைமை ஆசிரியர்கள் 2 பேர் வழக்கு தொடர்ந்தனர்.