பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 13 மற்றும் 14-ம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். மேலும், கடைசி ரயில் அனைத்து முனையங்களில் இருந்து இரவு 12 மணிக்கு புறப்படும். ஜனவரி 18-ம் தேதி முதல் ரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணிக்கு தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.