திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி முன்னிட்டு வரும் மே 30-ம் தேதி கிரிவலம் வர உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மலையே மகேசனாக எழுந்தருளி காட்சி தரும் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் வரும் மே 30-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தொடங்கி 31-ம் தேதி பகல் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. எனவே வரும் 30-ம்...
